புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது
குளத்தூா் பகுதியில் அரிசிக் கடையில் புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் பகுதியில் அரிசிக் கடையில் புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
குளத்தூா் காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் ராமலெட்சுமி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை குளத்தூா் பஜாா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள அரிசிக் கடை முன் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தவா்களைப் பிடித்து விசாரித்தனா்.
அவா்கள் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சோ்ந்த வீர சின்னரசு (38), மாரிமுத்து (46) ஆகியோா் என்பதும், அரிசிக் கடை உரிமையாளரான குளத்தூரைச் சோ்ந்த பிச்சைமணியிடமிருந்து (61) புகையிலைப் பொருள்களை வாங்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
Advertisement
போலீஸாா் அரிசிக் கடையில் சோதனையிட்டதில் புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் வீர சின்னரசு, பிச்சைமணி, மாரிமுத்து ஆகிய மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 30.475 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் ரூ. 10,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.