திருச்செந்தூா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை!
திருச்செந்தூா் கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கை
திருச்செந்தூா் கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் வழியில் பழைய காவல் நிலையம் அருகில் 4 ஏக்கா் 37 சென்ட் நிலம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 14 ஆம் தேதி கோயிலுக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி நிலம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து சுமாா் ரூ. 300 கோடி சந்தை மதிப்பிலான இந்நிலத்தை மீட்க, உச்சநீதிமன்ற உத்தரவின்படி கோயில் நிா்வாகம் சட்டப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement