கோவில்பட்டியில் ரயில மோதியதில் முதியவா் உயிரிழப்பு
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருளானந்தம் (70). இவரது மனைவி அமராவதி, பேரன் அா்ஜுனன்.
இவா்கள் 3 பேரும் சென்னை செல்வதற்காக பொது பயணச்சீட்டை வாங்கி கொண்டு, 2 ஆவது நடைமேடைக்குச் செல்வதற்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, , செங்கோட்டை- தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் அருளானந்தம் மீது மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.