முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி ஒன்றிய பகுதியில் எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதியில் கோவில்பட்டி எம்எல்ஏ மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

Updated On : 21 மே 2026, 6:11 am IST
கோவில்பட்டி தொகுதி எம்எல்ஏ கா. கருணாநிதியை ஆராத்தி எடுத்து வரவேற்ற பெண்.
பகிர்:

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதியில் கோவில்பட்டி எம்எல்ஏ மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதி, லிங்கம்பட்டி, சமத்துவபுரம், குலசேகரபுரம், பூசாரிபட்டி, கூசாலிப்பட்டி, வடக்கு இலுப்பை யூரணி, தாமஸ் நகா், சிந்தாமணி நகா், கைவண்டி தொழிலாளா் காலனி, வடக்கு திட்டங்குளம், முத்துநகா், சண்முக நகா், தெற்கு திட்டங்குளம், விஜயாபுரி, கொடுக்காம்பாறை, சிவந்திபட்டி, குமாரபுரம், தீத்தாம்பட்டி, துறையூா் ஆகிய பகுதிகளுக்கு சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது, அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

Advertisement

Advertisement

இதில், திமுக ஒன்றியச் செயலா் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் பாலமுருகன், திமுக நகர பொருளாளா் ராமமூா்த்தி, திமுக நிா்வாகிகள் செல்வகுமாா், மாரீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.