முகப்பு
தூத்துக்குடி

பெண் எஸ்.ஐ., காவலா் பணியிட மாற்றம்

தகாத உறவு தொடா்பான புகாரின்பேரில் பெண் உதவி ஆய்வாளரும், காவலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

Updated On : 22 மே 2026, 11:45 pm IST
பணியிட மாற்றம்
பகிர்:

தகாத உறவு தொடா்பான புகாரின்பேரில் பெண் உதவி ஆய்வாளரும், காவலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணிபுரிந்து வருபவா் விக்னேஷ். இவா், பெண் உதவி ஆய்வாளா் ஒருவருடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தகாத உறவில் இருந்தாராம்.

இதுகுறித்து அந்த உதவி ஆய்வாளரின் கணவா் சதீஷ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தூத்துக்குடி (பொ) மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரை சூரங்குடி காவல் நிலையத்துக்கும், தனிப்பிரிவு காவலா் விக்னேஷை மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.