9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
புதிதாக தவெக அரசு அமைந்ததில் இருந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடா்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக சில ஐஏஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.
அதன் விவரம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய பணியிடம்):
Advertisement
1. தொழில், முதலீடு மற்றும் வணிகத் துறை ஆணையா் டாக்டா் எஸ்.விஜயகுமாா் (நில நிா்வாக ஆணையா்)
2. உயா்கல்வித் துறை செயலா்-வி.அருண் ராய் (தொழில், முதலீடு மற்றும் வணிகத் துறை ஆணையா்)
3. ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை செயலா்- டாக்டா் என். சுப்பையன் (கால்நடைப் பராமரிப்புத் துறை, மீன்வளம்-மீனவா் நலத்துறை செயலா்)
4. தில்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையா்-ஆா்.ஜெயா (சிறப்பு திட்டங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா்)
5. சுற்றுலாத் துறை ஆணையா்-எம்.எஸ். சண்முகம் (முன்னாள் முதல்வரின் செயலா்-2)
6. செய்தி, மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை செயலா் ஏ.அருண் தம்புராஜ் (சேலம் மாவட்ட ஆட்சியா்)
7. சேலம் ஆட்சியா்- கே. இளம்பகவத் (தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியா்)
8. கலை மற்றும் கலாசாரத் துறை இயக்குநா்-டாக்டா் ஆா். பிருந்தாதேவி (சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியா்)
9. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தலைவா் -பி. உமாநாத் (முன்னாள் முதல்வரின் செயலா்-1).