முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சனிக்கிழமை நிகழ்ந்த வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 24 மே 2026, 2:12 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சனிக்கிழமை நிகழ்ந்த வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி நடராஜபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் பொன் நாகமணி (24). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா் சனிக்கிழமை, இனாம் மணியாச்சி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து அங்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா், இளைஞரின் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இருசக்கர வாகனம் நிலைகுலைந்து கீழே விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாரா? அல்லது வாகனம் மோதியதில் உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.