திருச்சி

அரியலூர் கோதண்டராமசாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு

தினமணி

அரியலூர், ஜன. 5: அரியலூரில் உள்ள ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அரியலூரில் புகழ்வாய்ந்த, பாடல் பெற்ற கோயிலான ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா புதன்கிழமை தொடங்கியது. மாலை 6 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்துக்குப் பிறகு, அருள்மிகு கோதண்டராமசாமி, மோகனி அலங்காரத்துடன் எழுந்தருளி, திவ்யரூபதரிசனம் அளித்தார். இதைத்தொடர்ந்து, சுவாமியின் திருவீதியுலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 6 மணிக்கு கருவறையிலிருந்து புறப்பட்ட அருள்மிகு கோதண்டராமசாமி, முன்பகுதி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு கோதண்டராமசாமிக்கு தீபாராதனைகள் செய்யப்பட்ட பின்னர், உபயதாரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நம்மாழ்வார் பரமபதவாசல் எதிரே எழுந்தருளிய பின்னர், காலை 6.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.

பக்தர்களின் கோவிóந்தா முழுக்கத்துடன் பரமபதவாசல் வழியாக எழுந்தருளிய கோதண்டராமசாமி, பிரகாரம் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். ஆழ்வாராதிகள், மோட்ச சேவைக்குப் பின்னர் சுவாமியின் திருவீதியுலா நடைபெற்றது.

பெருமாள் கோயில் தெரு முழுவதும் திருவீதியுலா கண்டருளிய பின்னர், இரவு வரை கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அலங்காரத்தில் அருள்பாலித்தார் அருள்மிகு கோதண்டராமசாமி. பரமபதவாசல் திறப்பில் அரியலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வி. தங்கராஜ், சார்பு நீதிபதி ரவி, அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல், அரியலூர் நகர்மன்றத் தலைவர் இரா. முருகேசன், அரியலூர் மாவட்ட தேமுதிக செயலர் இராம. ஜயவேல், செட்டிநாடு சிமென்ட்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை பொது மேலாளர் அழகர்சாமி, அரியலூர் அதிமுக தொகுதிச் செயலர் பி. கணேசன், வழக்குரைஞர் எஸ். சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை, கோயில் தக்கார் ரா. சந்திரசேகரன், செயல் அலுவலர் வை. மணி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்

யார் யாரோ மயங்கினரோ! த்ரிப்தி திம்ரி..

விஜய் சேதுபதி 51: படத் தலைப்பு டீசர் வெளியீடு!

”ராகுல் காந்தியை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” - சோனியா காந்தி உருக்கம்!

யோகி பாபுவின் புதிய பட போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT