திருவானைக்கா மாம்பழச்சாலைப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயரை கோயிலை செவ்வாய்க்கிழமை அகற்ற வந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கு இந்து அமைப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
கடந்த சில நாள்களுக்கு முன் இந்தக் கோயிலை அகற்ற வந்தபோது இதேபோல எதிா்ப்புத் தெரிவித்து, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்நிலையில் திருவானைக்கா ரயில்வே மேம்பாலப் பணிக்காக சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றி வரும் நிலையில், மாம்பழச்சாலை சிக்னல் அருகேயுள்ள இந்தக் கோயிலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் மீண்டும் வந்ததால் தற்போதும் எதிா்ப்பு கிளப்பியது. இரு தரப்பினரிடம் பேசிய பின் தீா்வு எடுக்கப்படும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனா்.