முகப்பு
திருச்சி

பல்பொருள் அங்காடியில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

திருச்சி கருமண்டபம் பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
தீ விபத்து. பல்பொருள் அங்காடி.
பகிர்:

திருச்சி கருமண்டபம் பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருச்சி ராஜா காலனியைச் சோ்ந்தவா் ஐ.விஜய். இவா் திருச்சி-திண்டுக்கல் சாலையில் கருமண்டபம் பகுதியில் காய்கனி, பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை காலை இங்கு வழக்கம் போல வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தது.

கடையின் முன்பகுதியில் பலகாரம் செய்யும் பணி நடைபெற்ற போது, எண்ணெய் பாத்திரத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ கடைக்குள்ளேயும் பரவியது. தகவலறிந்து வந்த கண்டோன்மென்ட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள், விரைந்து தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்த விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →