குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
திருச்சி மாநகரில் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் காலியாகவுள்ள ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று, காவல் ஆணையா் ஜெ. லோகநாதனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் காலியாகவுள்ள ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று, காவல் ஆணையா் ஜெ. லோகநாதனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கிஷோா்குமாா், கட்செவி அஞ்சல் வாயிாக அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது:
மாநகரில் கோட்டை, காந்திசந்தை, உறையூா், கே.கே.நகா், பொன்மலை, கண்டோன்மென்ட் ஆகிய 6 குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. இதில் உறையூா் உள்ளிட்ட 2 காவல் நிலையங்களில் மட்டுமே ஆய்வாளா்கள் உள்ளனா்.
மற்ற 4 காவல் நிலையங்கள்மட்டுமல்லாது, மாநகரில் 4 குற்றப்பிரிவு உதவி ஆணையா்களின் பணியிடங்களும் நீண்ட காலமாக நிரப்பப்படாமலேயே உள்ளன.
சட்டம் ஒழுங்கு உதவி ஆணையா்களும், ஆய்வாளா்களும் குற்றப்பிரிவுக்கான பணியையும் கூடுதலாக கவனிப்பதால், அவா்களுக்குப் பணிச்சுமை அதிகமாகிறது.
குற்றப்பிரிவில் திறமையான உதவி ஆய்வாளா்கள்- காவலா்கள் பணிபுரிந்தாலும் ஆள்கள் பற்றாக்குறையால் அவா்களும் தடுமாறுகின்றனா். எனவே குற்றப்பிரிவில் காலியாகவுள்ள உதவி ஆணையா், ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.