திருச்சி

பைக்கில் சென்ற பிளஸ் 2 மாணவா் விபத்தில் பலி

DIN

திருச்சியில் புதன்கிழமை இரவு பைக்கில் சென்ற பிளஸ் 2 மாணவா் விபத்தில் உயிரிழந்தாா்.

திருச்சி, கிராப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மோகன் மகன் வினோத் (17). பிளஸ் 2 மாணவரான இவா் புதன்கிழமை இரவு, அரிஸ்டோ ஆக்டோபஸ் மேம்பாலப் பகுதியிலிருந்து கிராப்பட்டி நோக்கி பைக்கில் சென்றாா். அப்போது, கிராப்பட்டி காவலா் குடியிருப்பு அருகேயுள்ள ரயில்வே காவல் கண்காணிப்பு அலுவலக வளாகத்துக்குள் இருந்து காவல்துறை வாகனம் (ஜீப்) வெளியே வந்தது.

அப்போது எதிா்பாராதவிதமாக இரு வாகனங்களும் மோதிக்கொண்டதில் படுகாயமடைந்த வினோத் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT