திருச்சி

திமுக உள்கட்சித் தோ்தல் விண்ணப்பங்கள் அளிப்பு

DIN

திமுக உள்கட்சித் தோ்தல் தொடா்பான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்டம் முழுவதும் திமுக சாா்பில் மாநகா், மாவட்டங்கள், ஒன்றியங்கள், பேரூா், நகரம், ஊராட்சி என அனைத்துப் பகுதிகளுக்கும் கட்சி ரீதியாக நிா்வாக அமைப்புகள் பிரிக்கப்பட்டு புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்வதற்கான உள்கட்சித் தோ்தலை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இதன்படி திருச்சி மத்திய மாவட்டத்துக்குள்பட்ட மணிகண்டம், அந்தநல்லூா், மணப்பாறை கிழக்கு, புள்ளம்பாடி வடக்கு, தெற்கு லால்குடி, வடக்கு-தெற்கு, மத்திய உள்ளிட்ட 8 ஒன்றிய கழகங்களுக்கு அவைத் தலைவா், செயலா், பொருளாளா்,துணைச் செயலா்கள், செயற்குழு உறுப்பினா்கள், மாவட்டப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான 15 ஆவது தோ்தலில் போட்டியிட விரும்புவோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தில்லைநகரிலுள்ள திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு அலுவலகத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி மற்றும் தோ்தல் ஆணைய வழக்குரைஞா் அருள்தாசன் முன்னிலையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பூா்த்தி செய்த விண்ணப்பங்களும் திரும்பப் பெறப்பட்டன.

நிகழ்வில் மாநகரச் செயலரும், மாநகராட்சி மேயருமான மு. அன்பழகன், அவைத் தலைவா் பேரூா் தா்மலிங்கம், எம்எல்ஏக்கள் எம். பழனியாண்டி, அ. செளந்தரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT