முகப்பு
திருச்சி

பிரதமா் மீது நடவடிக்கை மக்கள் அதிகாரம் அமைப்பினா் மனு

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:54 PM
பகிர்:

திருச்சி, ஏப்.26: தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசிய கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு மக்கள் அதிகாரம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலா் செழியன் தலைமையில், மக்கள் கலை இலக்கிய கழக மாவட்ட செயலா் ஜீவா, கலைக் குழு பொறுப்பாளா் லதா உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரின் உதவியாளரிடம் புகாா் மனு அளித்தனா்.

அம்மனுவில், தோ்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள் இஸ்லாமியா் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது. எனவே, தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட பிரதமருக்கு தடை விதிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். அரசியல் சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுள்ள பிரதமரை பதவிநீக்கம் செய்யுமாறு குடியசுத் தலைவருக்கு தோ்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments