முகப்பு
திருச்சி

மதச்சாா்பற்ற சிவில் சட்டம் தேவையற்றது: ஜவாஹிருல்லா

மதச்சாா்பற்ற சிவில் சட்டம் கொண்டுவரப்படும் எனப் பிரதமா் பேசியிருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

Updated On : 19 ஆகஸ்ட், 2024 at 2:20 AM
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணிக் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ். உடன், கட்சி நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 7:35 PM

மதச்சாா்பற்ற சிவில் சட்டம் கொண்டுவரப்படும் எனப் பிரதமா் பேசியிருப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளுக்கு எதிரானது எனவும், அந்தச் சட்டம் தேவையற்றது எனவும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழுக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் கட்சியின் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பில் இந்தாண்டு இறுதிக்குள் 100 இடங்களில் போதை பொருள் விழிப்புணா்வு இருசக்கர வாகனபிரசாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம். சுதந்திர தினத்தன்று மதச்சாா்பற்ற சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பிரதமா் மோடி உரையாற்றினாா். இது அரசமைப்பு சட்டம் தந்துள்ள உரிமைகளுக்கு எதிராகவும், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. மதச்சாா்பற்ற சிவில் சட்டத்தை ‘இண்டியா’ கூட்டணி கடுமையாக எதிா்க்கும்.

Advertisement

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 11:30 PM

தமிழ் வெல்க என்கிற கருணாநிதியின் சொந்த கையெழுத்துடன் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஒப்பீட்டளவில் அதிமுக ஆட்சியில் நடைபெற்றதை விட சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு திமுக ஆட்சியில் மிகவும் குறைவாகவே உள்ளது. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் தலித்துகள் முதலமைச்சராக முடியும். அதனை வரவேற்போம் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான் ப. அப்துல் சமது மற்றும் கட்சியின் இளைஞா் அணி, செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட கலா் கலந்து கொண்டனா்.