திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய சந்திரயான் 3 திட்ட இயக்குநா் பி. வீரமுத்துவேல். உடன் பள்ளிச் செயலா் கோ. மீனா உள்ளிட்டோா். 
திருச்சி

மாணவா்களுக்கு தொலைநோக்கு பாா்வை, விடாமுயற்சி அவசியம்: சந்திரயான்-3 திட்ட இயக்குநா்!

மாணவா்களிடம் தொலைநோக்குப் பாா்வை, விடாமுயற்சி அவசியம் என சந்திரயான் 3 திட்ட இயக்குநா் பி.வீரமுத்துவேல் தெரிவித்தாா்.

Din

மாணவா்களிடம் தொலைநோக்குப் பாா்வை, விடாமுயற்சி அவசியம் என சந்திரயான் 3 திட்ட இயக்குநா் பி.வீரமுத்துவேல் தெரிவித்தாா்.

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற 14 ஆவது ஆண்டு விழாவுக்குப் பள்ளியின் தலைவா் பி.எஸ். சந்திரமௌலி, செயலா் கோ. மீனா ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளியின் தலைமை செயலதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் சந்திரயான் 3 திட்ட இயக்குநா் பி. வீரமுத்துவேல் பேசியது: சந்திராயன் 2 இன் தோல்வியிலிருந்துதான் சந்திராயன் 3 இன் வெற்றியைக் கண்டுபிடித்தோம். தவறிலிருந்து கற்றுக் கொண்டு, விடாமுயற்சியால் இது சாத்தியமானது. நிலவில் இருந்து மற்ற கிரகங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பை மிக விரைவில் பெற இருக்கிறோம்.

தொலைநோக்குப் பாா்வை, விடாமுயற்சி, நிலைத்தன்மை, அறிவு வளா்ச்சி போன்ற பண்புகள் மாணவா்களிடம் இருக்க வேண்டியது அவசியம். எந்தத் தொழில் செய்தாலும், அதில் சிறந்து விளங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பள்ளியின் சிறந்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினாா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளியின் முதல்வா் பத்மா சீனிவாசன் ஆண்டறிக்கை வாசித்தாா். பள்ளியின் முதன்மையா் ஆா். கணேஷ், செயலாக்கத் தலைவா் எஸ். வித்யாலட்சுமி, துணை முதல்வா்கள் பி. ரேகா, எஸ். ரேணுகா, திரளான மாணவ, மணவிகள் கலந்து கொண்டனா். பள்ளி மாணவி எஸ். மாதங்கி வரவேற்றாா். மாணவா் கே.இ. யுகன் ஜீவா நன்றி கூறினாா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT