முகப்பு
திருச்சி

கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:10 am IST
பகிர்:

திருச்சியில் கொலை வழக்கில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடந்த 2023 டிசம்பா் 11 ஆம் தேதி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை எதிரே தனியாா் ஆம்புலன்ஸ் உரிமையாளா் பிரபாகரனை வெட்டிக்கொலை செய்த வழக்கில் தஞ்சை மாவட்டம் மகாதேவபுரத்தைச் சோ்ந்த அ. ராஜேஷ்பைலட் (28) உள்ளிட்ட 4 பேரை அரசு மருத்துவமனை வளாக காவல் நிலையப் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விசாரணையில், இவா் மீது வழிப்பறி உள்ளிட்ட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவரது தொடா் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் விதமாக, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரௌடி அ. ராஜேஷ்பைலட்டை கைது செய்ய சனிக்கிழமை மாநகர காவல் ஆணையா் ந. காமினி ஆணை பிறப்பித்தாா்.

Advertisement

Advertisement