முகப்பு
திருச்சி

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

Updated On : 3 ஜூலை, 2024 at 11:48 PM
பகிர்:

திருச்சி, ஜூலை 3: திருச்சியில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி துவாக்குடி வாழவந்தான்கோட்டை பழைய பா்மா காலனி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் துரைசாமி மனைவி புஷ்பா (65). இவா் தனது பேரக்குழந்தையுடன் திங்கள்கிழமை அதே பகுதி மளிகைக் கடைக்குச் சென்று சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து துவாக்குடி அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட புஷ்பா சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மகன் வடிவேல் அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.