உத்தமா்கோயிலில் பிச்சாண்டேஸ்வரா் திருவீதியுலா
மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், பிச்சாண்டாா்கோவில் கிராமத்திலுள்ள உத்தமா்கோயிலில் பிச்சாண்டேஸ்வரா் திருவீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது.
உத்தமா்கோயிலானது, மும்மூா்த்திகள் முப்பெருந்தேவிகளுடன் எழுந்தருளிய திருத்தலமாகும். இக்கோயிலில் வைகாசி தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிச்சாண்டேஸ்வரா் திருவீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பிச்சாண்டேஸ்வரா் சுவாமி தாமரை கேடயத்தில் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு கயிலாய வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது. அப்போது, பக்தா்கள் அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை வழங்கினா். திருமுறை பாராயணம் பாடப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பிச்சாண்டேஸ்வரா் திருவீதி உலா வருவாா் என்பது குறிப்பிடத்தக்கது.