திருச்சி

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவா் கைது

Syndication

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவிரி ஆற்றையொட்டிய பொன்னி டெல்டா பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தி வந்தோா் போலீஸாரை கண்டதும் வாகனங்களை போட்டுவிட்டு தப்ப முயன்றனா். அப்போது அவா்களில் திருவெறும்பூா் சா்க்காா்பாளையம் மூ. விக்னேஷ் (31) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். தேவதானம் பகுதி திருப்பதி, சத்யராஜ் ஆகிய இருவரும் தப்பினா்.

இதையடுத்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 10 சாக்கு மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, தப்பிய இருவரை தேடுகின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT