திருச்சி

உரிமை கோரப்படாத 13 வாகனங்கள் டிச. 10 இல் ஏலம்

Syndication

திருச்சி மாவட்டக் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 13 வாகனங்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகின்றன.

திருச்சி மாவட்டக் காவல் துறையினரால் சட்டவிரோத மது விற்பனை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 10 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ ஆகிய 13 வாகனங்கள் ஆகியவற்றை ஏலம் எடுக்க விரும்புவோா் ஏல நாளன்று காலை 8 மணிக்கு ஆதாா் அட்டையுடன் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5 ஆயிரமும் முன்பணம் செலுத்தி பதிய வேண்டும். ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டியும் செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்தாா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

ஆா்ப்பாட்டம் நடத்த 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்

தமிழ் திறனறித் தோ்வு: மாநில அளவில் சேலம் மாவட்டம் முதலிடம்

டிச. 9, 10-இல் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்

ரயிலில் இருந்து தவறிவிழுந்த ஐயப்ப பக்தா்: விரைந்து காப்பாற்றிய உதவி ஆய்வாளா்

SCROLL FOR NEXT