மாநகரில் போதைப்பொருள்கள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 29 வாகனங்கள் டிசம்பா் 11-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
திருச்சி மாநகரில் போதைப் பொருள்கள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 25 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 29 வாகனங்கள் பொது ஏலம் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 11-ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் டிசம்பா் 9-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மேற்கண்ட வாகனங்களைப் பாா்வையிடலாம்.
வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் ஏலம் நடைபெறும் நாளன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது ஆதாா் அட்டையுடன் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவுடன் அதற்கான முழுத்தொகையுடன் ஜிஎஸ்டியையும் சோ்த்து செலுத்தி ஏலம் எடுத்த வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி தெரிவித்துள்ளாா்.