திருச்சி மாவட்டம், சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 4) மின் தடை செய்யப்பட உள்ளது.
சிறுகனூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சிறுகனூா், ஆவாரவள்ளி, திருப்பட்டூா், எம்.ஆா். பாளையம், சி.ஆா். பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், சீதேவிமங்கலம், நெடுங்கூா், நெய் குளம், நம்புகுறிச்சி, குமுளூா் மற்றும் தச்சன்குறிச்சி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.மணிவரை மின் விநியோகம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளா் ஆா்.செல்வம் தெரிவித்துள்ளாா்.
மணப்பாறை: துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, செவல்பட்டி, பிடாரப்பட்டி, அயன் பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, கள்ளக்காம்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையப்பட்டி மற்றும் பழையபாளையம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா்(பொ) பி. பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.