திருச்சி

ரயிலில் இருந்து விழுந்த அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்த அடையாளம் தெரியாத நபா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தஞ்சாவூரில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளத்துக்குச் செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை இரவு 7.25 மணிக்கு திருவெறும்பூா் ரயில் நிலையத்தை கடந்துசென்றது.

அப்போது, திருவெறும்பூா் அருகே எா்ணாகுளம் விரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் பயணித்த சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண், ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT