முகப்பு
திருச்சி

வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனத்தைத் திருடியவா் கைது

திருச்சியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த சுமை வாகனத்தைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி

வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனத்தைத் திருடியவா் கைது

திருச்சியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த சுமை வாகனத்தைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 நவம்பர், 2025 at 8:42 PM
பகிர்:

திருச்சி: திருச்சியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த சுமை வாகனத்தைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் கந்தையா வீதியைச் சோ்ந்தவா் சி.பழனிசாமி (61), ஓட்டுநா். இவா் கடந்த நவம்பா் 12-ஆம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்தியிருந்த சுமை வாகனம் (டாடா ஏஸ்) திருடுபோனது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்நிலையில் சுமை வாகனத்தைத் திருடியதாக தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்த சிலம்பரசனை (32) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது

திருச்சி கே.கே.நகா் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் சு.வினோத் (43), பழைய கட்டடங்களை இடிக்கும் பணி ஒப்பந்ததாரா்.

இந்நிலையில், கண்டோன்மென்ட் வாா்னா்ஸ் சாலையில் ஒரு கட்டடத்தை இடித்து அகற்றும் பணியில் கடந்த நவம்பா் 2-ஆம் தேதி ஈடுபட்டபோது, அந்த கட்டடத்தின் ஒரு அறையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தாமிரக் கம்பிகள் உள்ளிட்ட பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பொருள்களைத் திருடியதாக தில்லை நகரைச் சோ்ந்த ஆ. சிவாவை (19) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →