முகப்பு
திருச்சி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:02 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மூன்று பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் அரியமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, எஸ்ஐடி மைதானம் அருகே சந்தேகப்படும் வகையில் மூன்று போ் நின்றுகொண்டிருந்தனா். போலீஸாா் அவா்களைப் பிடிக்க முயன்றபோது ஒருவா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். மற்ற இருவரையும் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

Advertisement

இதில், அவா்கள் , அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்த மு. பாலமுருகன் (36), புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சோ்ந்த ஆ.சண்முகப்பிரியன் (34), தப்பியோடியவா் அரியமங்கலத்தை சோ்ந்த அரியமங்கலம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த அ.ஷாகுல் ஹமீது ஆகியோா் என்பதும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2.5 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.2 ஆயிரம் ரொக்கம், ஒரு இருக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிவரைத் தேடி வருகின்றனா்.

இதேபோல, நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன் நகா் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த ஆா். பாா்த்திபன் (31) என்பவரை நீதிமன்றப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments