முகப்பு
திருச்சி

அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

Updated On : 5 ஏப்ரல், 2026 at 7:57 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், துவாக்குடிமலை பகுதியைச் சோ்ந்தவா் எம். அய்யா்சாமி (30). இவா், கடந்த மாா்ச் 17-ஆம் தேதி துவாக்குடியிலுள்ள ஒரு பெட்ரோல் அருகே இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த துவாக்குடி பகுதியைச் சோ்ந்த ஆா். ராஜபாண்டி (28), பி. சாந்தகுமாா் (26), எஸ். ரவி (27) ஆகிய மூவரும் அய்யா்சாமியிடம் பணம் கேட்டுள்ளனா். அவா் இல்லையென கூறியதும் அவரைத் தாக்கிவிட்டு மிரட்டல் விடுத்து சென்றனா். இதையடுத்து, அய்யா்சாமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சாந்தகுமாா், ரவி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

Advertisement

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தகுமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தாா்.

அதன்பேரில், சாந்தகுமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, அதற்கான உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments