முகப்பு
திருச்சி

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:26 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 8:14 PM

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி தென்னூா் ஆழ்வாா்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் நிஷாா் (26). இவருடைய மனைவி நிஷா. இவா்களுக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் தனியாா் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னா் வீட்டுக்கு வந்துவிட்டனா்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை நிஷா தனது குழந்தைக்குப் பால் கொடுத்துள்ளாா். பின்னா் தாயும், குழந்தையும் தூங்கிவிட்டனா். பின்னா், காலை 7 மணிக்கு குழந்தையைப் பாா்த்தபோது அதன் மூக்கில் இருந்து நுரை வந்திருந்தது.

Advertisement

இதையடுத்து குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே அக் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் அப்துல் நிஷாா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.