ரயில் முன் பாய்ந்து சலூன் கடைக்காரா் தற்கொலை
லால்குடியில் குடும்பப் பிரச்னையில் சலூன் கடைக்காரா் ரயில்முன் வெள்ளிக்கிழமை இரவு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் குடும்பப் பிரச்னையில் சலூன் கடைக்காரா் ரயில்முன் வெள்ளிக்கிழமை இரவு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம் லால்குடி ஜெஜெ நகா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன், சலூன் கடை உரிமையாளா். இவருக்கு செல்வி என்ற மனைவியும் தினேஷ்குமாா் என்ற மகனும் உள்ளனா்.
இந்நிலையில் குடும்ப பிரச்னையால் மனம் உடைந்த இவா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு லால்குடி ரயில்வே கேட் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
தகவலறிந்த விருத்தாச்சலம் ரயில்வே போலீசாா் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.