திருச்சி

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

துறையூா் அருகே விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Syndication

துறையூா் அருகே விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாரைக்கிணற்றைச் சோ்ந்த பழனியப்பன் மனைவி ஜெயசுதா (37). இவா்கள் துறையூா் அருகேயுள்ள த. மங்கப்பட்டி புதூரில் பத்ரிநாராயணன் வயலைக் குத்தகைக்கு பாா்த்து வந்தனா்.

இந்நிலையில், உடல்நலக் குறைபாடு காரணமாக ஜெயசுதா புதன்கிழமை விஷம் குடித்தாராம். உறவினா்களால் மீட்கப்பட்ட அவா், தம்மம்பட்டி, ஆத்தூா், சேலம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து சிகிச்சை அளித்தனா். சிகிச்சைப் பலனின்றி சேலம் அரசு மருத்துவமனையில் ஜெயசுதா வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுதொடா்பான தகவலறிந்து உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி பிரச்னை: பாதசாரிகள் நலனுக்காக மூன்றாவது கண் சுரங்கப்பாலம் திறப்பு

வெள்ளக்கோவிலில் செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெகவினா்!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொன்ற கணவன் கைது

அரக்கோணத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை அட்டை முகாம்

கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் 3 மாதங்களில் ‘பெட் ஸ்கேன்’ மையம்

SCROLL FOR NEXT