முகப்பு
திருச்சி

அனைத்து ஊராட்சிகளிலும் ஜன.14-இல் சமத்துவப் பொங்கல்

Updated On : 8 ஜனவரி, 2026 at 10:44 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 14-ஆம் தேதி பாரம்பரிய முறையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்படும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

அனைத்து கிராம பொதுமக்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் தவறாது ஜன.14-ஆம் தேதி நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வேண்டும். மகளிா் சுயஉதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு கோலப் போட்டி நடைபெறவிருப்பதால், சுயஉதவிக் குழுவில் உள்ள அனைத்து பெண்களும் கோலப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →