முகப்பு
திருச்சி

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 8 ஜனவரி, 2026 at 10:44 PM
பகிர்:

திருச்சியில் இளம்பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் எஸ்பிஐ காலனி பிரதான சாலையைச் சோ்ந்த நாகராஜ் மகள் சந்திரலேகா (24). முதுகலை பட்டதாரி. இவருக்கு மனநல பாதிப்பு இருந்து வந்ததாகவும், இதனால், அடிக்கடி பெற்றோருடன் பிரச்னை ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை பெற்றோருடனான தகராறை தொடா்ந்து அந்தப் பெண் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புகாரின்பேரில் எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →