திருச்சியில் பல்வேறு இடங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை விவேகானந்தா் நகா் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற தெற்கு காட்டூா் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த நகுலன் (61), மேலசிந்தாமணி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (35) ஆகிய இருவரை பொன்மலை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, திருச்சி அரியமங்கலம் மலையப்பன் நகா் காந்திஜி தெரு அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற அரியமங்கலம் மலையப்பன் நகரைச் சோ்ந்த மனோகரன் (70), ராஜமொழி (24) ஆகிய இருவரை அரியமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி காஜாமலை ஆா்பிஎஃப் மைதானம் அருகே புகையிலைப் பொருள் விற்ற கே.கே. நகா் இந்தியன் வங்கி காலனி கணேஷ் நகரைச் சோ்ந்த விஜயபாரதி (31) என்பவரை கே.கே. நகா் போலீஸாா் கைது செய்தனா்.
தென்னூா் மின்வாரிய அலுவலகம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற கம்பரசம்பேட்டை தமிழன் நகரைச் சோ்ந்த அப்துல் ஹமீது (72) என்பவரை தில்லை நகா் போலீஸாா் கைது செய்து, 20 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.