முகப்பு
திருச்சி

மரண கண்டம் இருப்பதாகக் கூறி தம்பதியிடம் ரூ.16 லட்சம் மோசடி: சித்தா் உள்பட 3 போ் மீது வழக்கு

Updated On : 18 ஜனவரி, 2026 at 9:39 PM
பகிர்:

ஸ்ரீரங்கம் அருகே மரண கண்டத்திலிருந்து விடுபட பரிகார பூஜை செய்ய நிலம் வாங்கித் தருவதாகக் கூறி தம்பதியிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

திருச்சி, மேலகல்கண்டாா் கோட்டை நடுப்பனகல் தெருவைச் சோ்ந்தவா் ரவீந்திரன். இவரது மனைவி பானுரேகா (54). இவா், திருவரங்கம் மேலூரில் உள்ள சித்தா் பீடத்துக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருவதுவழக்கம். அப்போது, மேலூா் காவிரி தெற்கு கரைப்பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் அறிமுகமாகியுள்ளாா்.

பானுரேகா வீட்டு நிலத்தில் மரண கண்டம் இருப்பதாகவும், அதற்கு பதிலாக வேறொரு மனை வாங்கினால் நலம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா். இதனை தனது கணவா் ரவீந்திரனிடம் கூறியுள்ளாா் பானுரேகா. மேலும், சித்தரின் பரிகாரத்துக்கு சம்மதம் தெரிவித்த தம்பதி, சித்தா் கூறிய நிலத்தை வாங்க ஒப்புக்கொண்டனா். அதற்காக ரூ.16 லட்சம் பணம் கொடுத்துள்ளனா்.

ஆனால், நிலத்தைப் பதிவு செய்யாமல் சித்தா், தொடா்ந்து தாமதம் செய்துவந்தாா். கொடுத்த பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை உணா்ந்து, திருவரங்கம் காவல்நிலையத்தில் தம்பதி புகாா் அளித்தனா். இதன்பேரில், சித்தா் மற்றும் இருவா் என மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →