உடல்நலக் குறைவால் மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு
உடல்நலக் குறைவு காரணமாக திருச்சி மத்திய சிறைக் கைதி உயிரிழந்தாா்.
உடல்நலக் குறைவு காரணமாக திருச்சி மத்திய சிறை கைதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் தோலூா்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் வீ.கண்ணையன் (72). இவா் மீது தொட்டியம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ‘போக்ஸோ’ வழக்கில், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்தாா்.
இவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக மூச்சுத்திணறல் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி கண்ணையன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மத்திய சிறை அலுவலா் விவேக் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.