முகப்பு
திருச்சி

சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது வழக்குப் பதிவு

Updated On : 29 மார்ச், 2026 at 7:41 PM
கோப்புப் படம்
பகிர்:

திருச்சி பெண்கள் சிறையில் சனிக்கிழமை சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பெண்கள் சிறை அமைந்துள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், பெண்கள் சிறை வாா்டா் இந்திரா சனிக்கிழமை பிற்பகல் கைதிகளுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்தாா்.

அப்போது, இங்கு அடைக்கப்பட்டுள்ள சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த ஆா். சஞ்சனா (33) என்ற கைதி, சிறை வாா்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியுள்ளாா்.

இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் சிறை வாா்டா் இந்திரா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கைதி சஞ்சனா மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.