வைரலான விடியோ! மெட்ரோவில் பயணிகளுக்குத் தொல்லை கொடுத்த 11 பெண்கள் மீது வழக்கு
வைரலான விடியோ எதிரொலியாக மெட்ரோ ரயிலில் பயணிகளுக்குத் தொல்லை கொடுத்த 11 பெண்கள் மீது வழக்குப் பதிவு
பெங்களூர்: மெட்ரோ ரயிலுக்குள் சப்தமாகப் பாடி மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பதினொரு பெண் பயணிகள் கொண்ட குழு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மார்ச் 15ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் சர்வதேச கண்காட்சி மையத்திலிருந்து கேம்பேகௌடா ரயில் நிலையம் வழித்தடத்தில் பயணித்த மெட்ரோ ரயிலில் 11 பெண்கள் சப்தமாகப் பாடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.