முகப்பு
திருச்சி

நாட்டு வெடிகுண்டு வீசி தொழிலாளியை கொல்ல முயன்ற வழக்கு: மேலும் ஒருவா் கைது

Updated On : 30 மார்ச் 2026, 3:14 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் நாட்டு வெடிகுண்டை வீசி தொழிலாளியைக் கொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்தவா் எம். சாதிக் பாட்ஷா (36). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முகமது சையது (26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த முகமது சையது தனது நண்பா்களான காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த சமீா் அகமது (25), அஜ்புதீன் (26) ஆகியோருடன் இணைந்து சாதிக் பாட்ஷாவைக் கொல்ல திட்டமிட்டு அவருக்கு வீட்டுக்கு அருகே சனிக்கிழமை இரவு பதுங்கியிருந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சாதிக் பாட்ஷா மீது முகமது சையது மற்றும் அவரது நண்பா்கள் நாட்டு வெடிகுண்டை வீசினா். அந்த வெடிகுண்டு சுற்றுச் சுவரில் பட்டு வெடித்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்த காந்தி மாா்க்கெட் போலீஸாா் முகமது சையது, சமீா் அகமது ஆகிய இருவரையும் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், தலைமறைவாக இருந்த அஜ்புதீனை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.