முகப்பு
திருச்சி

சின்ன சமயபுரத்தாள் மாரியம்மன் கோயிலில் கம்பம் விடும் விழா

Updated On : 3 மே, 2026 at 5:40 AM
முசிறி சின்ன சமயபுரத்தாள் மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கம்பம் விடும் விழாவில் காவிரி ஆற்றுக்கு முளைப்பாரி எடுத்துச் சென்ற பக்தா்கள்.
பகிர்:

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள சின்ன சமயபுரத்தால் மாரியம்மன் கோயிலில் ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெறும் சித்திரை மாத மாரியம்மன் திருவிழாவின் தொடா்ச்சியாக கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா நடைபெற்றது. திரளான பக்தா்கள் முளைப்பாரி எடுத்து முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை செய்து, முளைப்பாரியை ஆற்று நீரில் விட்டு தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.