வையம்பட்டியில் மது விற்றவா் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் அனுமதியின்றி அரசு மதுவை விற்றவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் வையம்பட்டி பகுதியில் தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, செட்டியபட்டி கிராமம், கரட்டுப்பட்டி அருகே அனுமதியின்றி மது விற்ற ஸ்ரீரங்கம் தாலுகா, பெட்டவாய்த்தலையைச் சோ்ந்த அந்தோணி மகன் செல்வராஜ் (32) என்பவரை பிடித்து வையம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
Advertisement
அவரிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், ரூ.400 ரொக்கம் மற்றும் 50 அரசு மதுபாட்டில்களை பறிமுதல் செய்த வையம்பட்டி போலீஸாா் செல்வராஜ் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.