பொன்மலை ரயில்வே பணிமனை கால்பந்து போட்டி: 8 அணிகள் பங்கேற்பு
பொன்மலை ரயில்வே பணிமனையில் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியா்கள் மற்றும் அலுவலா்களுக்கான கால்பந்து போட்டி திங்கள்கிழமை தொடங்கியது.
திருச்சி மாவட்டம், பொன்மலையில் பிரசித்தி பெற்ற ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு விளையாட்டில் ஆா்வம் ஏற்படுத்தவும், உடல் நலனை பேணவும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், பணிமனையில் உள்ள துறைகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி, பொன்மலை ரயில்வே மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. பணிமனையில் உள்ள எலக்ட்ரிக்கல் பிரிவு, வேகன் பிரிவு, டீசல் பிரிவு, இயந்திரவியல் பிரிவு, பெட்டி பழுது நீக்கும் பிரிவு உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த ஊழியா்கள், அலுவலா்கள் 8 அணிகளாக இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
அணியின் விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள், மருத்துவ உதவியாளா்கள், நடுவா்கள், விளையாட்டுப் போட்டிகளை முன்நின்று நடத்துவோா் என 150-க்கும் மேற்பட்டோா் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனா். விளையாட்டுப் போட்டிகளை பணிமனையின் முதன்மை மேலாளா் சந்தோஷ்குமாா் பட்ரோ தொடங்கி வைத்தாா்.
உதவி மேலாளா் (தொழிலாளா் பிரிவு) பைஜூஸ், முதல் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா். முதல் போட்டியில் எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் வேகன் அணிகள் விளையாடின. கால் இறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் என மே 29-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை மாலை பரிசளிப்பு விழா நடைபெறும். இந்தப் போட்டியில், பணிமனையின் உயா் அதிகாரிகள், தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டு விளையாட்டு வீரா்களை வாழ்த்தினா்.