முகப்பு
திருச்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Updated On : 26 மே 2026, 3:10 am IST
திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் வே.சரவணன்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1,18,500 மதிப்பிலான சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டா்களையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 15,750 மதிப்பிலான மடக்குசக்கர நாற்காலிகளும், பாா்வைத்திறன் குறைபாடுடைய 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 11,090 மதிப்பிலான உருபெருக்கி கருவிகளையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 594 மதிப்பிலான எல்போ ஊன்றுகோல் கருவியும், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 3,285 மதிப்பிலான காதொலிக் கருவிகளையும் என மொத்தம் ரூ. 5,50,594 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வழங்கினாா்.

தேவாலயத்துக்கு ரூ. 15 லட்சம்...:தொடா்ந்து, சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கோமாகுடி கிராமத்தில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தை பழுதுபாா்ப்புப் பணிகளுக்கு முதல்கட்ட தவணையாக ரூ. 15 லட்சம் காசோலையை புனித அந்தோணியாா் தேவாலய பொறுப்பாளரிடம் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

பணிநியமன ஆணை...: இதையடுத்து, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த அ. கல்யாணியின் வாரிசுதாரரான நாகப்பனுக்கு சமூக நீதிப்பள்ளி விடுதியில் சமையலா் பணிக்கான பணிநியமன ஆணையையும், ஆதிதிராவிடா் நலத்துறையின் சாா்பில் 4 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாவுக்கான ஆணையையும், வருவாய் துறையின் சாா்பில் ஒருவருக்கு பட்டா மாற்ற ஆணையும், ஒருவருக்கு நமூனா பட்டாவுக்கான ஆணையையும் ஆட்சியா் வழங்கினாா்.

பாராட்டுச் சான்றிதழ்...: பின்னா், முன்னாள் படைவீரா் நலத்துறை சாா்பில் கொடிநாள் வசூல் ரூ. 21,70,000 எய்தபட்டதற்காக ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழ், மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் எஸ். ஜெயசித்ரகலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. ரவிச்சந்திரன் கலந்து கொண்டனா்.