அரியலூர்

லாரி மோதியதில் இளைஞர் சாவு

DIN

அரியலூரை அடுத்த வாலாஜாநகரம் அருகே புதன்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
வாலாஜாநகரத்தைச் சேர்ந்தவர் கோ.தென்னரசு (28).அரசு சிமென்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தென்னரசு புதன்கிழமை நள்ளிரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் அரியலூர்-ஜயங்கொண்டம் சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.  
வாலாஜநகரம் வேகத்தடையில் இருசக்கரவாகனம் ஏறி இறங்கியபோது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த தென்னரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91% தோ்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT