அரியலூர்

மதுக்கடை அமைப்பதற்கு எதிராக போராட்டம்

DIN

அரியலூர் மாவட்டம் பூண்டி அருகேயுள்ள வேப்பங்குழி கிராமத்தில் மூடப்பட்ட மதுக்கடையை திறப்பதற்கான முயற்சியைக் கண்டித்து  அப்பகுதி இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேப்பங்குழி கிராமத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த மதுக்கடை, நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது எங்கள் ஊரின் மயானம் அருகே மதுக்கடை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மதுக்கடை வேண்டாம் என்று அப்பகுதி இளைஞர்கள் ஆட்சியரிடம் கடந்த வாரம் மனு அளித்திருந்தனர்.   இந்நிலையில், மதுக்கடை அமையவுள்ள இடத்தில் அப்பகுதி இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை சாலையைத் துண்டித்து, பூண்டி ஊராட்சிக்குட்பட்ட எல்லைக்குள் மதுக்கடை அல்லது தனியார் மதுபான பார்களோ அமைப்பதற்கு அனுமதி கிடையாது என விளம்பரத் தட்டி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT