நூலக உறுப்பினர் சேர்க்கை முகாம்
அரியலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு, புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் அரியலூர் நிர்மலா பெண்கள் நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு, புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் அரியலூர் நிர்மலா பெண்கள் நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஏப்.23 ஆம் தேதி உலக புத்தகத் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு,மாவட்ட மையம் நூலகம் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது. பள்ளி மாணவிகள் 250 பேர் ஆர்வமுடன் புதிய உறுப்பினராக இணைத்து கொண்டனர். அவர்களுக்கு நூலகர்கள் ந. செசிராபூ, ச. நாராயணன் ஆகியோர் உறுப்பினர் அட்டையை வழங்கினர். முகாமுக்கு பள்ளி ஆசிரியைகள் முன்னிலை வகித்தனர்.