அரியலூர்

நல்லாம்பாளையம் மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்

DIN

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
செந்துறை அருகேயுள்ள நல்லாம்பாளையம் மாரியம்மன் கோயிலில், கடந்தாண்டு மே மாதம் 25 ஆம் தேதி நடைபெற்ற தேரோட்டத்தின் போது, அச்சு முறிந்து 5 பேர் காயமடைந்தனர். 60 ஆண்டு பழமை வாய்ந்த இத்தேர் ரூ.3.50 லட்சம் செலவில் புதிய அச்சு, சக்கரங்கள் செய்யப்பட்டு திங்கள்கிழமை தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரின் மீது எழுந்தருளினார். பக்தர்கள் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் கோயிலில் இருந்து புறப்பட்டு செந்துறை சாலை, திரௌபதியம்மன் கோயில் தெரு, மடத்துத்தெரு, மாரியம்மன் கோயில் தெரு வழியாக நிலையை அடைந்தது. பக்தர்கள் வீடுகள்தோறும் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT