அரியலூர்

ஆலோசனை  கூட்டத்தில்  மயங்கி விழுந்த எம்எல்ஏ

DIN

அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டி.டி.வி. தினகரன் அணி ஆலோசனைக்  கூட்டத்தில் தஞ்சாவூர் எம்.எல்.ஏ. ரெங்கசாமி மயங்கி விழுந்தார்.
அரியலூர் கல்லூரி சாலையிலுள்ள தனியார் ஹோட்டலில் டி.டி.வி தினகரன் அணி ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அரசு தலைமைக் கொறடா மனோகரன் பங்கேற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும், உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் எனப் பேசினார். நிறைவில், தஞ்சாவூர் எம்.எல்.ஏ. ரெங்கசாமி பேசத் தொடங்கியபோது, 
அரங்கில் காற்றோட்டமில்லாதவாறு தொண்டர்கள் சுற்றி நின்றதால் அவருக்கு அதிகளவில் வியர்த்தது.  இதனால் சுவாசிக்க முடியாமல் திணறிய ரெங்கசாமி, திடீரென அரங்கில் மயங்கி விழுந்தார். உடனே தொண்டர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT