அரியலூர்

ஊராட்சி செயலாளர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை பயிற்சி

DIN

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தா. பழூரில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை குறித்த ஒரு நாள் பயிற்சி தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட மன்றத்தில்  செவ்வாய்கிழமை அளிக்கப்பட்டது. 
பயிற்சிக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜமாணிக்கம் வரவேற்றார்.   துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில், தா. பழூர் இந்தியன் வங்கி மேலாளர் சந்திரசேகர் பங்கேற்று,  ஊராட்சி செயலர்கள், பஞ்சாயத்தில் இருந்து பெறப்படும் நிதிகளை ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து வரவு, செலவுகளைப் பராமரிப்பது, டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பது குறித்து பல்வேறு கருத்துகளை வழங்கினார். பயிற்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, அல்லிராணி, இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT