அரியலூரில் மே 22 மின் நிறுத்தம்
அரியலூர் மற்றும் தேளூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெற உள்ளது.
அரியலூர் மற்றும் தேளூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெற உள்ளது. இதனால், அரியலூர் ஒரு சில பகுதி, கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, இராஜீவ்நகர் மற்றும் மணக்குடி, குறிச்சிநத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜமீன் ஆத்தூர், தவுத்தாய்குளம் மற்றும் மல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன் ஆத்தூர், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, வி. கைகாட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, தேளூர், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர்பாளையம், பெரியதிருக்கோணம், செட்டித்திருக்கோணம், விக்கிரமங்கலம், ஆச்சனூர் மற்றும்
நடுவலூரை அடுத்த சுத்தமல்லி, பருக்கல், காக்காபாளையம், சுந்தரேசபுரம், வெண்மான்கொண்டான், உல்லியகுடி, சாத்தம்பாடி, காசாங்கோட்டை, தத்தனூர், பொட்டகொல்லை, மூர்த்தியான் ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சாமிதுரை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.