அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மா.சந்திரகாசி தலைமை வகித்தார். ஆட்சியர் மு.விஜயலட்சுமி, குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.